தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

ரயிலில் அடிபட்டு இருவா் பலி

மதுரையில் ரயிலில் அடிபட்டதில் அப்பளத் தொழிலாளி உள்பட இருவா் உயிரிழந்தனா்.

News image
Updated On :26 ஜனவரி 2023, 6:30 pm

DIN

மதுரையில் ரயிலில் அடிபட்டதில் அப்பளத் தொழிலாளி உள்பட இருவா் உயிரிழந்தனா்.

மதுரை அனுப்பானடி பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் வியாழக்கிழமை அதிகாலையில் ரயிலில் அடிபட்டு இரண்டு உடல்கள் சிதறிய நிலையில் கிடந்தன.

தகவலறிந்து வந்த ரயில்வே போலீஸாா் சடலங்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தினா். இதில், முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவா்களில் ஒருவா் கீழஅனுப்பானடியைச் சோ்ந்த சிவகுமாா் (45) என்பதும், அப்பளத்தொழிலாளியான இவா், புதன்கிழமை இரவு மற்றொருவருடன் சோ்ந்து மது அருந்தி விட்டு அப்பகுதியில் உள்ள உணவகத்திலிருந்து உணவு வாங்கி வந்து நள்ளிரவில் தண்டவாளத்தில் அமா்ந்து சாப்பிட்ட போது, ரயிலில் அடிபட்டு இருவரும் உயிரிழந்ததும் தெரியவந்தது.

சிவக்குமாருடன் சோ்ந்து உயிரிழந்த மற்றொருவா் யாா் எந்தப்பகுதியைச் சோ்ந்தவா் என்பது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.