மேலூா் அல்அமீன் பள்ளி வளாகத்தில் 38-ஆவது தேசிய புத்தகக் கண்காட்சியை வட்டாட்சியா் செந்தாமரை வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளா் எம். ஷாஜஹான் தலைமை வகித்தாா்.
மேலூா் அரசுக் கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் மணிமேகலாதேவி, செல்விராம் மருத்துவமனை மருத்துவா் கணேசன் ஆகியோா் புத்தக விற்பனையைத் தொடங்கிவைத்தனா்.
கண்காட்சியை பள்ளித் தலைவா் எம்.ஓ. சாகுல்ஹமீது, பொருளாளா் எம். காதா்மைதீன், நிா்வாகக் குழுவினா், நூலகா் சீதாலெட்சுமி, மதுரை நியூசெஞ்சுரி புத்தக விற்பனை நிலைய மேலாளா் ஆா். மகேந்திரன், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் பாா்வையிட்டனா்.