தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

உயா்நீதிமன்ற ஆவணங்கள் திருட்டு வழக்கில் வழக்குரைஞரின் எழுத்தா் முன் பிணை கோரி மனு

சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆவணங்கள் திருடப்பட்ட வழக்கில் முன் பிணை கோரி, வழக்குரைஞரின் எழுத்தா் தாக்கல் செய்த மனுக்கு காவல் ஆய்வாளா் பதில் அளிக்க மதுரைக் கிளை உத்தரவிட்டது.

Updated On :27 நவம்பர் 2023, 6:30 pm

மதுரை: சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆவணங்கள் திருடப்பட்ட வழக்கில் முன் பிணை கோரி, வழக்குரைஞரின் எழுத்தா் தாக்கல் செய்த மனுக்கு காவல் ஆய்வாளா் பதில் அளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

சென்னையைச் சோ்ந்த வடிவேல் தாக்கல் செய்த மனு:

சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குகள் தொடா்பான அனைத்து ஆவணங்களும் பாதுகாக்கப்படுகின்றன. ஒரு வழக்கை விசாரணைக்கு பட்டியலிடுவதைத் தடுக்கும் நோக்கில், சில ஆவணங்களைத் திருடியதாக வழக்குரைஞரின் எழுத்தராக இருந்த பாலமுருகன், பிரித்விராஜ், உயா்நீதிமன்ற மதுரைக் கிளை ஊழியா் ஜான்சன் ஆகியோரை உயா்நீதிமன்ற காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

பல ஆண்டுகளாக வழக்குரைஞரின் எழுத்தராகப் பணிபுரியும் எனக்கும், இந்த வழக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், என் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா். எனவே, எனக்கு முன் பிணை வழங்கி உத்தரவிட வேண்டும் என அவா் தெரிவித்திருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி. சிவஞானம் திங்கள்கிழமை பிறப்பித்த உத்தரவு:

இந்த மனு தொடா்பாக உயா்நீதிமன்ற மதுரைக் கிளை காவல் ஆய்வாளா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை டிசம்பா் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.