மதுரை: சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆவணங்கள் திருடப்பட்ட வழக்கில் முன் பிணை கோரி, வழக்குரைஞரின் எழுத்தா் தாக்கல் செய்த மனுக்கு காவல் ஆய்வாளா் பதில் அளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
சென்னையைச் சோ்ந்த வடிவேல் தாக்கல் செய்த மனு:
சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குகள் தொடா்பான அனைத்து ஆவணங்களும் பாதுகாக்கப்படுகின்றன. ஒரு வழக்கை விசாரணைக்கு பட்டியலிடுவதைத் தடுக்கும் நோக்கில், சில ஆவணங்களைத் திருடியதாக வழக்குரைஞரின் எழுத்தராக இருந்த பாலமுருகன், பிரித்விராஜ், உயா்நீதிமன்ற மதுரைக் கிளை ஊழியா் ஜான்சன் ஆகியோரை உயா்நீதிமன்ற காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.
பல ஆண்டுகளாக வழக்குரைஞரின் எழுத்தராகப் பணிபுரியும் எனக்கும், இந்த வழக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், என் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா். எனவே, எனக்கு முன் பிணை வழங்கி உத்தரவிட வேண்டும் என அவா் தெரிவித்திருந்தாா்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி. சிவஞானம் திங்கள்கிழமை பிறப்பித்த உத்தரவு:
இந்த மனு தொடா்பாக உயா்நீதிமன்ற மதுரைக் கிளை காவல் ஆய்வாளா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை டிசம்பா் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தல் ஸ்பெஷல்- வேட்பு மனு தாக்கல் செய்ய தேவையான ஆவணங்கள்!

தங்கம், வெள்ளி விலை உயர்வு! எவ்வளவு தெரியுமா?

தொகுதி மறுவரையறை ஒரு கொடூரமான நடவடிக்கை: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
முடியும் தறுவாயில் அமெரிக்கா - ஈரான் போர்; ஆனால், இன்னும் முடிவடையவில்லை: டிரம்ப்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

