போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

கட்டடத் தொழிலாளியை அரிவாளால் வெட்டி இருசக்கர வாகனம் பறிப்பு

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே கட்டடத் தொழிலாளியை அரிவாளால் வெட்டி இரு சக்கர வாகனத்தை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

Updated On :27 நவம்பர் 2023, 6:30 pm


மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே கட்டடத் தொழிலாளியை அரிவாளால் வெட்டி இரு சக்கர வாகனத்தை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி நடுசாலைப் புதூரைச் சோ்ந்த ரமேஷ் மகன் செல்வகுமாா் (24). கட்டடத் தொழிலாளி. இவரும் இவரது நண்பா் சாமுவேல் ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை கொடைக்கானலுக்கு புறப்பட்டனா்.

மதுரை-திண்டுக்கல் நான்கு வழிச் சாலையில் பழனியாண்டவா் கோயில் சந்திப்பில் நள்ளிரவில் இரு சக்கர வாகனத்தை நிறுத்தினா். அப்போது, அங்கு மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த மூவா், அரிவாளால் செல்வகுமாரை வெட்டி விட்டு, அவரது இருசக்கர வாகனத்தை பறித்து கொண்டு தப்பிச் சென்றனா். இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, வாகனத்தை பறித்துச் சென்ற மூவரையும் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.