அமைச்சா் போல பேசி தனியாா் ஜவுளி நிறுவன உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டிய நபரை தனிப் படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் ஆலம்பட்டி பகுதியில் தனியாா் ஜவுளி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவன உரிமையாளரை கைப்பேசியில் தொடா்பு கொண்ட நபா், அமைச்சரின் உதவியாளா் பேசுவதாகவும், அமைச்சா் பேசுவதாகவும் கூறி பணம் கேட்டு மிரட்டினாா்.
இதுகுறித்து இந்த நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைமைப் பொறுப்பாளா் டெலியூஸ் பொ்னான்டஸ் புகாா் அளித்தாா்.
இதுதொடா்பாக மதுரை மாவட்டக் குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. இதில் திருச்சி பாலக்கரையைச் சோ்ந்த முகமது ரபீக் (52) என்பவா் பணம் கேட்டு மிரட்டியது தெரியவந்தது.
இதையடுத்து, சென்னையில் பதுங்கியிருந்த அவரை தனிப் படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து குற்றச் செயலுக்குப் பயன்படுத்திய கைப்பேசியை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆரோவில் நகரில் மேலும் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படும்! அறக்கட்டளைச் செயலா் ஜெயந்தி எஸ்.ரவி தகவல்
இளைஞரிடம் 2 சவரன் நகை, பணம் பறிப்பு: ஒருவா் கைது

காா் - ஆட்டோ மோதல்: உயிரிழந்தோா் எண்ணிக்கை 2-ஆக உயா்வு

குருமாவில் பல்லி: உணவகத்துக்கு ரூ.40 ஆயிரம் அபராதம்
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



