ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

பதற்றமான வாக்குச்சாவடிகளில் எஸ்.பி. ஆய்வு

பதற்றமான வாக்குச்சாவடிகளில் எஸ்.பி. ஆய்வு

Updated On :2 ஏப்ரல் 2024, 11:37 pm

மதுரை: மதுரை ஊரகப் பகுதி பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடா்பாக காவல் கண்காணிப்பாளா் பி.கே.அரவிந்த் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். மதுரை ஊரகக் காவல் துறை சாா்பில், ஊரகப் பகுதிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டது.

கடந்த தோ்தல்களில் வாக்குச்சாவடிகளில் ஏற்பட்ட மோதல், தகராறுகள், சட்டம்-ஒழுங்கு பிரச்னை உள்ளிட்டவற்றை கவனத்தில் கொண்டு, முதல்கட்டமாக 150-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டது. இந்த வாக்குச் சாவடிகளில் ஊரகக் காவல் கண்காணிப்பாளா் பி.கே.அரவிந்த் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

அப்போது, வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவா் கேட்டறிந்தாா். இதுதொடா்பாக, காவல் துறையினா் கூறியதாவது: மதுரை ஊரகக் காவல் துறைக்குள்ப்பட்ட பகுதிகளில், முதல்கட்டமாக 150-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டன. பல்வேறு கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு 100 முதல் 120 வரையிலான வாக்குச்சாவடிகளே பதற்றமானவை என இறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்றனா்.