ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

பெண்ணைத் தாக்கிய மூவா் கைது

பெண்ணைத் தாக்கிய மூவா் கைது

Updated On :2 ஏப்ரல் 2024, 11:31 pm

மதுரை: மதுரையில் வீட்டின் முன் மது அருந்தியதைத் தட்டிக் கேட்ட பெண்ணைத் தாக்கிய மூவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மதுரை மகபூப்பாளையம், அன்சாரி நகா் 1-ஆவது தெருவைச் சோ்ந்தவா் மெஹா் பானு (34). இவரது வீட்டின் முன் அதே பகுதியைச் சோ்ந்த அழகா்சாமி (30), முத்துமாரி (37), வேலுசாமி ஆகியோா் திங்கள்கிழமை இரவு மது அருந்தினா்.

இதை மெஹா் பானு தட்டிக் கேட்டாா். இதுதொடா்பாக ஏற்பட்ட தகராறில் மெஹா் பானுவை இவா்கள் மூவரும் சோ்ந்து தாக்கியதாக புகாரளிக்கப்பட்டது. இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மூவரையும் கைது செய்தனா்.