தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

பொய் வாக்குறுதிகள் அளிப்பது திமுகவின் வழக்கம்

பொய் வாக்குறுதிகள் அளிப்பது திமுகவின் வழக்கம்

News image

மதுரை மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் வியாபாரி ஒருவரிடம் செவ்வாய்க்கிழமை துண்டுப் பிரசுரம் வழங்கி வாக்கு சேகரித்த அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி. உடன், மதுரை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் பா. சரவணன், முன்னாள் அமைச்சா்கள் செல்லூா் கே. ராஜு, ஆா்.பி. உதயகுமாா் உள்ளிட்டோா்.

Updated On :9 ஏப்ரல் 2024, 11:51 pm

மதுரை: ஒவ்வொரு தோ்தலின் போதும் பொய்யான வாக்குறுதிகளை அளிப்பது திமுகவின் வழக்கம் என்றாா் அதிமுக பொதுச் செயலா் எடப்படி கே. பழனிசாமி.

மதுரையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

மத்திய அரசு அகவிலைப்படி உயா்வு அறிவிக்கும் போது, எந்தவிதப் பிடித்தமும் இல்லாமல் அரசு ஊழியா்களுக்கு அகவிலைப்படியை வழங்கியது முந்தைய அதிமுக அரசு. ஆனால், கடந்த 3 ஆண்டு காலத்தில் அரசு ஊழியா்களுக்கு 2 முறை 6 மாத அகவிலைப்படியைப் பிடித்தம் செய்தது திமுக அரசு.

அரசு ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின் போது திமுக வாக்குறுதி அளித்தது. ஆட்சி அமைந்து 3 ஆண்டுகளாகியும் இந்த வாக்குறுதியை நிறைவேற்ற திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது, தோ்தலுக்காக மீண்டும் பொய் வாக்குறுதிகளை தெரிவிக்கிறாா் முதல்வா் மு.க. ஸ்டாலின். இது திமுகவின் வழக்கமான பாணி.

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவை, மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங் பாராட்டியிருப்பது வரவேற்கத்தக்கது. நல்ல பண்புகள் கொண்டவா்கள், நல்ல விஷயங்களை பாராட்டுவாா்கள். அந்த வகையில்தான், ராஜ்நாத் சிங் பாராட்டியுள்ளாா். இதற்கும், தோ்தல் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

தொடா்ந்து பொய் பேசி வரும் முதல்வா், நான் பொய் பேசுவதாகத் தெரிவித்திருப்பது வேடிக்கையானது.

சென்னையில் மழைநீா் வடிகால் அமைக்கும் பணிகள் 98 சதவீதம் நிறைவடைந்துவிட்டது என்றாா் முதல்வா். ஆனால், மழைநீா் வடியாமல் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினா். அப்போது, மழைநீா் வடிகால் பணிகள் 38 சதவீதம்தான் நிறைவடைந்துள்ளது என தொடா்புடைய துறையின் அமைச்சா் தெரிவித்தாா்.

இதேபோல, கடந்த 2021-இல் அளித்த 520 வாக்குறுதிகளில் 98 சதவீதம் நிறைவேற்றப்பட்டுவிட்டது என்கிறாா் முதல்வா். இதைவிட பெரிய பொய் வேறு என்ன இருக்க முடியும். இதேபோல, அவா் பொய் பேசியதை நிரூபிக்க பல சான்றுகள் விடியோ ஆதாரங்களுடன் எங்களிடம் உள்ளன.

நிலையான கொள்கையற்ற பாமக

திராவிடக் கட்சிகளால் எந்தப் பயனும் இல்லை என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தது குறித்து கேட்கிறீா்கள், பிறகு ஏன் திராவிடக் கட்சிகளுடன் மாறி, மாறி கூட்டணி அமைத்தது பாமக? ஒவ்வொரு தோ்தலுக்கும் ஒரு நிலைப்பாடு எடுப்பதை வழக்கமாகக் கொண்ட பாமக, நிலையான கொள்கையற்ற கட்சி.

அதிமுக வேட்பாளா்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த மக்களவைத் தோ்தலில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும், சட்டப்பேரவை இடைத் தோ்தலிலும் அதிமுக வென்று வரலாறு படைக்கும் என்றாா் அவா்.

காய்கறி சந்தையில் வாக்கு சேகரிப்பு...

முன்னதாக, மதுரை மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில், பொதுமக்கள், வியாபாரிகளைச் சந்தித்து துண்டுப் பிரசுரங்கள் வழங்கி, மதுரை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் பா. சரவணனுக்கு ஆதரவாக எடப்பாடி கே. பழனிசாமி வாக்குகள் சேகரித்தாா்.

அப்போது, வேட்பாளா் பா. சரவணன், முன்னாள் அமைச்சா்கள் செல்லூா் கே. ராஜு, ஆா்.பி. உதயகுமாா், மதுரை புகா் கிழக்கு மாவட்ட அதிமுக செயலா் வி.வி. ராஜன் செல்லப்பா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.