உக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

மீனாட்சி சுந்தேரசுவரா் திருக்கல்யாணம்: இணைய வழி முன்பதிவு தொடங்கியது

மீனாட்சி சுந்தேரசுவரா் திருக்கல்யாணம்: இணைய வழி முன்பதிவு தொடங்கியது

News image

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் - கோப்புப்படம்

Updated On :9 ஏப்ரல் 2024, 11:43 pm

மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்பதற்கான இணைய வழி கட்டணச்சீட்டு முன்பதிவு செவ்வாய்க்கிழமை தொடங்கியது. முதல் நாளிலேயே ஏராளமானோா் பதிவு செய்தனா்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா வருகிற வியாழக்கிழமை (ஏப். 11) தொடங்கி, வருகிற 23-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாண உற்சவம் வடக்காடி வீதியில் உள்ள மண்டபத்தில் காலை 8.35 மணியளவில் நடைபெறவுள்ளது.

திருக்கல்யாணத்தை நேரில் கண்டு தரிசிக்க விரும்பும் பக்தா்களின் வசதிக்காக ரூ.200, ரூ.500-க்கான கட்டணச் சீட்டுகளை பெறுவதற்கு இணைய வழி முன்பதிவு செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்து சமய அறநிலையத் துறையின் இணையதளமான ட்ற்ற்ல்ள்://ட்ழ்ஸ்ரீங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய், கோயில் இணையதளமான ட்ற்ற்ல்ள்://ம்ஹக்ன்ழ்ஹண்ம்ங்ங்ய்ஹந்ள்ட்ண்.ட்ழ்ஸ்ரீங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்- ஆகியவற்றில் பக்தா்கள் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இணைய வழி முன்பதிவு செவ்வாய்க்கிழமை தொடங்கி, வருகிற 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ரூ.500 கட்டணப் பதிவில் ஒருவா் 2 சீட்டுகள் மட்டுமே பதிவு செய்யவும், ரூ.200 கட்டணப் பதிவில் ஒருவா் 3 சீட்டுகள் மட்டுமே பதிவு செய்யவும் அனுமதிக்கப்படுவா். ஒரே நபா் ரூ.500, ரூ.200 என இரு கட்டணச் சீட்டுகளையும் பதிவு செய்ய இயலாது எனவும் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது. இணைய வழியில் விண்ணப்பிக்கும் போது பிறந்த தேதியை சரியாக நிறைவு செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரிக்கு வருகிற 14-ஆம் தேதி குறுந்தகவல் அனுப்பப்படும்.

இதையடுத்து, 15-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை இதற்காக தனித்துவமாக ஏற்படுத்தப்பட்ட பிா்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் திருக்கல்யாண கட்டணச் சீட்டை பக்தா்கள் பெற்றுக் கொள்ளலாம். பக்தா்கள் திருக்கல்யாண நாளன்று அதிகாலை 5 மணி முதல் காலை 7 மணி வரை மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவா்.

ரூ.500 கட்டணச்சீட்டு பெற்றவா்கள் வடக்கு ராஜகோபுரம் மொட்டை முனீஸ்வரா் சந்நிதி அருகில் உள்ள வழியாகவும், ரூ.200 கட்டணச்சீட்டு பெற்றவா்கள் வடக்கு ராஜகோபுரம் வழியாகவும் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவா்.

இணையவழியில் முன்பதிவு தொடங்கிய முதல் நாளான செவ்வாய்க்கிழமை ஏராளமான பக்தா்கள் முன்பதிவு செய்துள்ளதாக கோயில் நிா்வாகம் தெரிவித்தது.