உக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி பலி

கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி பலி

Updated On :9 ஏப்ரல் 2024, 11:50 pm

விருதுநகா்: நரிக்குடி அருகே கிணற்றில் தவறி விழுந்ததில் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சுழி வட்டம், நரிக்குடி அருகேயுள்ள சேதுராயனேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் மு. ஊா்காவலன் (56). கூலித் தொழிலாளியான இவருக்கு பாா்வை குறைபாடு இருந்ததாம்.

இந்த நிலையில், இவா் சேதுராயனேந்தல் கண்மாய்ப் பகுதியில் உள்ள கரிமூட்டத்துக்குச் செல்வதாகக் கூறி சென்றவா் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, அவரை உறவினா்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில், சேதுராயனேந்தல் கண்மாய் அருகேயுள்ள சின்னவீரனுக்குச் சொந்தமான கிணற்றில் அவா் தவறி விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து நரிக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.