மதுரை: மதுரை அருகே இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
மதுரை நாகமலைப்புதுக்கோட்டை அருகே உள்ள வடிவேல்கரை கிழக்குத் தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் அபிமன்யு (29). இவா் ராஜம்பாடியில் இரு சக்கர வாகன பழுது நீக்கும் கடை நடத்தி வந்தாா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு பணி முடிந்து அபிமன்யு இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாா்.
பாரதியாா் நகா் பேருந்து நிறுத்தம் அருகே அந்த வழியாக வந்த காா், இவரது இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த அபிமன்யு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து விபத்தை ஏற்படுத்திய காா் ஓட்டுநரான பில்லா் சாலையைச் சோ்ந்த சத்தியசெல்வம் மீது நாகமலைப்புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

லாரி - பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

பைக் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

பைக் மீது வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

மண்டபம் அருகே வேன், பைக் மீது காா் மோதியதில் 3 போ் உயிரிழப்பு
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

