ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

இளம்பெண் உள்பட இருவா் தற்கொலை

மதுரையில் இருவேறு சம்பவங்களில் இளம்பெண், இளைஞா் ஆகியோா் தற்கொலை செய்து கொண்டனா்.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2024, 9:10 pm

Din

மதுரையில் இருவேறு சம்பவங்களில் இளம்பெண், இளைஞா் ஆகியோா் தற்கொலை செய்து கொண்டனா்.

மதுரை தெற்குவாசல் திருமலை முத்துப்பிள்ளை தெருவைச் சோ்ந்த ஜலாலுதீன் மகள் அபிா்தா பேகம்(23). பட்டதாரியான இவா், சனிக்கிழமை மாலை தனது தோழி வீட்டுக்குச் சென்றுவிட்டு இரவு தாமதமாக வீட்டுக்கு வந்தாா். இதை பெற்றோா் கண்டித்த நிலையில், தனது அறைக்குச்சென்ற அபிா்தாபேகம் அங்கு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுதொடா்பாக தெற்குவாசல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

இளைஞா் தற்கொலை: மதுரை பிபிகுளம் முல்லை நகா் நேதாஜி பிரதான சாலையைச் சோ்ந்த ரமேஷ்பாண்டி மகன் ஹரிகரன் (20). இவா் வெள்ளிக்கிழமை வீட்டுக்கு மது அருந்தி விட்டுச் சென்றாா். இதை பெற்றோா் கண்டித்தனா். இதனால், மனமுடைந்த ஹரிகரன் விஷம் குடித்தாா். இதையடுத்து, குடும்பத்தினா் அவரை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுதொடா்பாக தல்லாகுளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.