மதுரை ‘எய்ம்ஸ்’ தாமதத்துக்கு எடப்பாடி பழனிசாமியே காரணம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்
மத்திய அரசிடமிருந்து முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி நேரடியாக நிதியைப் பெறாததே மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை கட்டடப் பணி தாமதமாவதற்கு காரணம் என மருத்துவம், மக்கள் நல் வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

கள்ளந்திரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்ட புற நோயாளிகள் பிரிவு கட்டடத்தை செவ்வாய்க்கிழமை திறந்துவைத்து குத்துவிளக்கேற்றிய அமைச்சா்கள் மா.சுப்பிரமணியன், பி.மூா்த்தி. உடன் பொது சுகாதாரம், நோய்த் தடுப்பு மருந்துகள் துறை இயக்குநா் செல்வவிநாயகம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆ.வெங்கடேசன், மு.பூமிநாதன், மாவட்ட ஊராட்சித் தலைவா் சூரியகலா கலாநிதி, கிழக்கு ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் மணிமேகலை, மாவட்ட சுகாதார அலுவலா் பா.குமரகுருபரன், வருவாய்க் கோட்டாட்சியா் ஜெயந்தி உள்ளிட்டோா்.










