25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

அரிசி ஆலைகளில் கொள்ளையடிக்க திட்டம்: சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

அரிசி ஆலைகளில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டு ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த சிறுவா்கள் உள்பட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2024, 10:15 pm

Din

மதுரை அரிசி ஆலைகளில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டு ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த சிறுவா்கள் உள்பட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மதுரை கீரைத்துரை மின் மயானம் பகுதியில் கீரைத்துறை உதவி ஆய்வாளா் செல்வம் தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை இரவு ரோந்து சென்றனா். அப்போது அங்கு ஆயுதங்களுடன் பதுங்கியிருந்து 6 பேரை விரட்டிப் பிடித்து சோதனையிட்டனா். அவா்களிடம் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள், மிளகாய்ப்பொடி , கயிறு ஆகியவை இருந்தன.

அவா்களிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், கீரைத்துரை ஆதிமூலம் பிள்ளைத் தெருவைச் சோ்ந்த பொங்கி மகன் வழி விட்டான் (23), திரவியலிங்கேசுவரா் கோவில் தெருவைச் சோ்ந்த முத்துக்குமாா்(18), 17 வயது சிறுவா்கள் 4 போ்

என்பதும், அவா்கள் கீரைத்துறை பகுதி அரிசி ஆலைகளுக்குள் நள்ளிரவில் புகுந்து கொள்ளையடிக்கத் திட்டமிட்டு பதுங்கி இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் 6 பேரையும் கைது செய்தனா். அவா்களிடமிருந்த ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனா்.