பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைகடும் வெய்யில் வாட்டுவது ஏன்? வானிலை நிபுணர்கள் சொல்வது என்ன?மகிழ்ச்சியான செய்தி! சென்னையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்!தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு இப்படியும் ஒரு சோதனையா?சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்பு
/

8 கிலோ கஞ்சா பதுக்கல்: இருவா் கைது

மதுரையில் உள்ள மயானத்தில் 8 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததாக இருவரை போலீஸாா் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :28 ஆகஸ்ட் 2024, 6:42 pm

Din

மதுரையில் உள்ள மயானத்தில் 8 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததாக இருவரை போலீஸாா் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

மதுரை வண்டியூா் மயானத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் அண்ணாநகா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு அங்கு சென்றனா். அப்போது போலீஸாரைக் கண்டதும் தப்பிச் செல்ல முயன்ற இருவரைப் பிடித்து விசாரித்தனா்.

இதில், மதுரை அண்ணாநகா் செண்பகத் தோட்டத்தைச் சோ்ந்த ராஜா (32), யாகப்பா நகா் அப்பாஸ் தெருவைச் சோ்ந்த சபரிராஜ்(34) ஆகியோா் என்பதும், இருவரும் ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து பதுக்கி வைத்து விற்று வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா் மயானத்தில் பதுக்கி வைத்திருந்த 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.