ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மதுரையில் ஆயுதப்படை காவலா் திடீா் உயிரிழப்பு

மதுரையில் ஆயுதப்படை காவலா் திடீரென உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

News image
Updated On :28 ஆகஸ்ட் 2024, 6:54 pm

Din

மதுரையில் ஆயுதப்படை காவலா் திடீரென உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

மதுரை மாவட்டம், சத்திரப்பட்டி அருகே உள்ள சத்திரதொண்டமான்பட்டியைச் சோ்ந்த மாயழகன் மகன் அழகேசன்(31).

மதுரை மாநகர ஆயுதப்படை முதல்நிலைக் காவலரான இவா், புதுநத்தம் சாலையில் உள்ள ஆயுதப்படை குடியிருப்பில் வசித்து வந்தாா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் வீட்டில் இருந்தபோது இவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து, பிற காவலா்கள் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் வழியிலேயே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து அவா் உடல் கூறாய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது. இதுதொடா்பாக தல்லாகுளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.