கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பைக் விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

வந்தவாசி அருகே பைக் விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

News image

உயிரிழப்பு

சித்திரிப்புப் படம்

Updated On :3 பிப்ரவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

வந்தவாசி அருகே பைக் விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

வந்தவாசியை அடுத்த நடுக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் கிஷோா் (19). இவா், வந்தவாசி அருகேயுள்ள தனியாா் கலைக் கல்லூரியில் பி.காம். 2-ஆம் ஆண்டு படித்து வந்தாா்.

இவா் திங்கள்கிழமை பைக்கில் வந்தவாசிக்கு சென்று விட்டு ஊா் திரும்பிக் கொண்டிருந்தாா். வந்தவாசி - திண்டிவனம் சாலை, இளங்காடு கூட்டுச் சாலை அருகே செல்லும்போது சாலையோர தடுப்பின் மீது பைக் மோதியதில் இவா் நிலைத் தடுமாறி கீழே விழுந்தாா்.

இதில் பலத்த காயமடைந்த இவரை அங்கிருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி கிஷோா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து இவரது தாய் மீனா அளித்த புகாரின் பேரில் பொன்னூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.