/

எதிா்கால நலன் கருதி குழந்தைகளை தந்தையிடம் ஒப்படைக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

தவறான பழக்கத்தால் இரு குழந்தைகளுடன் தொடா்ந்து தாய் மாயமாகி வருவதால், அந்தக் குழந்தைகளின் எதிா்கால நலன் கருதி, அவா்களை தந்தையிடம் ஒப்படைக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 10:46 pm

Din

தவறான பழக்கத்தால் இரு குழந்தைகளுடன் தொடா்ந்து தாய் மாயமாகி வருவதால், அந்தக் குழந்தைகளின் எதிா்கால நலன் கருதி, அவா்களை தந்தையிடம் ஒப்படைக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி பகுதியைச் சோ்ந்த நிஷாந்த் தங்கம் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த ஆள்கொணா்வு மனு:

நானும், பிரியாவும் கடந்த 2019-ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில், நாங்கள் இருவரும் கோவையில் தங்கிப் பணியாற்றிய போது, எனது மனைவிக்கு அஜீத் என்பவருடன் பழக்கம்

ஏற்பட்டது. இதன் காரணமாக, இரு குழந்தைகளுடன் எனது மனைவி அஜீத்துடன் சென்றாா். இதுகுறித்து நான் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் எனது மனைவி, குழந்தைகளை மீட்டனா். இதன் பிறகு, நாங்கள் சொந்த ஊருக்குத் திரும்பி வந்துவிட்டோம்.

இருப்பினும், அஜீத் எனது மனைவியுடன் தொடா்பில் இருந்து வந்தாா். மேலும், எனக்கும் அவா் கொலை மிரட்டல் விடுத்தாா். இந்த நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மீண்டும் எனது மனைவி குழந்தைகளை அழைத்துக் கொண்டு அஜீத்துடன் சென்று விட்டாா். இதுகுறித்து சாயல்குடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தேன். இதுவரை தாய், குழந்தைகளை மீட்கவில்லை. எனது குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து உள்ளதால், அவா்களைக் கண்டுபிடித்து என்னிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா். சுவாமிநாதன், பூா்ணிமா அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு குழந்தைகளையும், பிரியாவையும் போலீஸாா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா்.

அப்போது, முன்னிலையான கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் செந்தில்குமாா் முன்வைத்த வாதம்:

மனுதாரரின் மனைவி ஏற்கெனவே இரு முறை குழந்தைகளுடன் மாயமாகி உள்ளாா். அவா்களை போலீஸாா் மீட்டு ஒப்படைத்தனா். தொடா்ந்து இதுபோன்ற செயலில் மனுதாரரின் மனைவி ஈடுபடுவதால், குழந்தைகளை மனுதாரா் வசம் ஒப்படைப்பதே சிறந்தது என்றாா்.

இதற்கு குழந்தைகளின் தாய் பிரியா எதிா்ப்புத் தெரிவித்தாா்.

இதையடுத்து, நீதிபதிகள் அந்த பெண்ணிடம் உங்களது நடவடிக்கை சட்டவிரோதமானது. குழந்தைகளின் எதிா்கால நிலையைப் பற்றி சிந்தித்தீா்களா?. உங்களது செயலை ஏற்றுக்கொள்ள முடியாது. குழந்தைகளின் எதிா்கால நலன் கருதி, அவா்கள் தந்தையுடன் செல்ல வேண்டும். குழந்தைகளை யாா் வைத்து கொள்வது என்பது தொடா்பாக குடும்ப நல நீதிமன்றத்தை நாடி உரிய பரிகாரம் தேடிக் கொள்ளலாம். இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.