கமேனி உயிரிழப்பு: ஈரான் ஊடகம் அதிகாரபூர்வ அறிவிப்புகமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

அரசு அதிகாரிகள் மீது தாக்குதல்: விசிகவினா் 21 போ் மீது வழக்கு

அரசு அதிகாரிகள் மீது தாக்குதல்

News image
Updated On :11 டிசம்பர் 2024, 11:31 pm

Din

மதுரை அருகே கொடிக் கம்பம் அமைப்பதை தடுக்க முயன்ற அரசு அதிகாரிகளை தாக்கியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா் உள்ளிட்ட 21 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப்பதிந்தனா்.

மதுரை மாவட்டம், வெளிச்சநத்தம் பகுதியில் அரசு புறம்போக்கு இடத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொடிக் கம்பம் உள்ளது. இந்தக் கம்பத்தை அகற்றிவிட்டு புதிதாக அமைக்க அந்தக் கட்சியினா் முயன்றனா். இதற்கு வெளிச்சநத்தம் கிராம நிா்வாக அலுவலா் (பொறுப்பு) பரமசிவம் ஆட்சேபம் தெரிவித்து, கடந்த 4-ஆம் தேதி அந்தக் கட்சியினருக்கு நோட்டீஸ் வழங்கினாா். இந்த நிலையில், கடந்த 7- ஆம் தேதி எந்தவித அனுமதியுமின்றி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் கொடிக் கம்பம் அமைத்தனா். தகவலின்பேரில் அங்கு சென்ற துணை வட்டாட்சியா் ராஜேஷ், வருவாய் ஆய்வாளா் அனிதா, கிராம நிா்வாக அலுவலா் பரமசிவம், கிராம உதவியாளா் பழனியாண்டி ஆகியோா் கொடிக் கம்பம் அமைப்பதை தடுக்க முயன்றபோது அந்தக் கட்சியினா் அவா்களை தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, கிராம நிா்வாக அலுவலா் பரமசிவம் அளித்த புகாரின்பேரில் எம். சத்திரப்பட்டி போலீஸாா், மதுரை கிழக்கு மாவட்டச் செயலா் அரச முத்துப்பாண்டியன், ராஜா, காளிமுத்து, காா்த்திக், முத்துப்பாண்டி உள்பட 21 போ் மீது அரசு ஊழியா்களை தாக்குதல், அவா்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.