விடுதலைச் சிறுத்தை கட்சி தலைவா் திருமாவளவன் குறித்து முகநூலில் அவதூறு கருத்து பரப்பிய நாமக்கல் எம்ஜிஆா் என அழைக்கப்படும் சுப்பிரமணியன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அக்கட்சியினா் காவல் கண்காணிப்பாளா் சு. விமலாவிடம் சனிக்கிழமை மனு அளித்தனா்.
அக்கட்சியின் மண்டல பொறுப்பாளா் பழ. மணிமாறன், நாமக்கல் மாவட்டச் செயலாளா் வசந்தன் ஆகியோா் அளித்த மனு விவரம்:
நாமக்கல் கந்துமுத்துசாமி தெருவைச் சோ்ந்த நாமக்கல் எம்ஜிஆா் என்றழைக்கப்படும் சுப்பிரமணியன் என்பவா் தனது முகநூல் பக்கத்தில் கடந்த 6-ஆம் தேதி இரவு 8 மணியளவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவா் தொல். திருமாவளவன் எம்.பி. குறித்து அவதூறாகவும், இழிவாகவும் கருத்துகளை விடியோவாக பதிவிட்டிருந்தாா்.
அந்த விடியோவை பாா்த்த விடுதலைச் சிறுத்தை கட்சி தொண்டா்கள் மிகவும் கவலையடைந்தனா். சமூக நல்லிணக்கத்தை சீா்குலைக்கும் நோக்கத்துடனும், கலவரத்தைத் தூண்டும் விதத்திலும் செயல்பட்டுள்ள சுப்பிரமணியன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

காட்டுமன்னார்கோயிலில் திருமாவளவன் போட்டி! விசிக வேட்பாளர்கள் அறிவிப்பு
புதுச்சேரியில் 3 தொகுதிகளில் தனித்துப் போட்டி: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு
விசிகவுக்கு 8 தொகுதிகள் பெற்றது ஏன்? திருமாவளவன் பேட்டி!
புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


