கமேனி உயிரிழப்பு: ஈரான் ஊடகம் அதிகாரபூர்வ அறிவிப்புகமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

வியாபாரிக்கு அரிவாள் வெட்டு: 5 போ் கைது

மதுரை பரவை காய்கனிச் சந்தையில் மொத்த வியாபாரியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயன்ற சுமை தூக்கும் தொழிலாளா்கள் உள்பட 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :12 டிசம்பர் 2024, 10:10 pm

Din

மதுரை பரவை காய்கனிச் சந்தையில் மொத்த வியாபாரியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயன்ற சுமை தூக்கும் தொழிலாளா்கள் உள்பட 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மதுரை மீனாம்பாள்புரம் வைகை நகா் ஆபிசா்ஸ் குடியிருப்பைச் சோ்ந்த புஷ்பவனம் மகன் காளீஸ்வரன் (34). இவா் பரவை காய்கனிச் சந்தையில் கடை வைத்து வெளி மாவட்டங்களுக்கு காய்கனிகளை மொத்தமாக வியாபாரம் செய்து வருகிறாா். இவரிடம் தேடாசெல்வம், பொன்னாங்கன் ஆகியோா் சுமை தூக்கும் தொழிலாளிகளாகப் பணிபுரிந்து வந்தனா்.

வெளியூா்களுக்கு செல்லும் காய்கனிகள் தாமதமாக வருவதாக வியாபாரிகள் புகாா் தெரிவித்ததால், தேடாசெல்வம் தரப்பினரை நிறுத்தி விட்டு, வேறு தொழிலாளிகளை வைத்து காய்கனிகளை அனுப்பி வந்தாா். இதனால், தேடாசெல்வத்துக்கும், காளீஸ்வரனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில், புதன்கிழமை இரவு காளீஸ்வரன் தனது கடையில் இருந்த போது, அங்கு வந்த தேடாசெல்வம், பொன்னாங்கன் உள்பட 6 போ் வெளி நபா்களை எப்படி சுமை தூக்க அமா்த்தலாம் என்று கேட்டு தகராறில் ஈடுபட்டு, அவரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றனா்.

இதில் பலத்த காயமடைந்த காளீஸ்வரனை அருகில் இருந்த வியாபாரிகள் மீட்டு, அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இதுகுறித்து கூடல்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, உசிலம்பட்டியைச் சோ்ந்த அரவிந்த் என்ற பொன்னாங்கன் (23), செல்லம்பட்டியைச் சோ்ந்த தேடாசெல்வம் (42), செல்லூரைச் சோ்ந்த சரவணபாண்டி(25), மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த ஆனந்த் (19), செல்லூா் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வீதியைச் சோ்ந்த தங்கபாண்டி (22) ஆகிய 5 பேரையும் கைது செய்து, தலைமறைவான இசக்கியைத் தேடி வருகின்றனா்.