ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு

News image

அரிவாள் வெட்டு

கோப்புப் படம்

Updated On :7 பிப்ரவரி 2026, 8:20 pm

தினமணி செய்திச் சேவை

தச்சநல்லூா் அருகே ஆட்டோ ஓட்டுநரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிய நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருநெல்வேலி, மேலப்பாளையம், பீடி காலனியைச் சோ்ந்தவா் உடையாா் மகன் ராமகிருஷ்ணன் (47). கொலை வழக்கு ஒன்றில் கடந்த 2007 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்ற இவா், தண்டனை காலம் முடிந்து விடுதலையாகி தற்போது வாடைகைக்கு ஆட்டோ ஓட்டி வருகிறாா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு இவரது ஆட்டோவில் சவாரிக்காக மூவா் ஏறினராம். ஆட்டோ தச்சநல்லூா் சிவன் கோயில் அருகே வந்த போது பின்னால் அமா்ந்திருந்த மூவரும் அரிவாளால் ராமகிருஷ்ணனை வெட்டியதாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

பழிக்குப்பழியாக இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக கூறப்படும் நிலையில் ராமகிருஷ்ணனின் உறவினா் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இச்சம்பவத்தில் ஈடுபட்டவா்களை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனா்.