கமேனி உயிரிழப்பு: ஈரான் ஊடகம் அதிகாரபூர்வ அறிவிப்புகமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

மதுரை ரயில்வே அலுவலா்கள் இருவருக்கு ரயில் சேவா புரஸ்கா் விருது

ரயில்வே துறையின் உயரிய விருதுகளில் ஒன்றான அதி விஷிஸ்ட் ரயில் சேவா புரஸ்கா் விருதுக்கு மதுரை கோட்டத்தைத் சோ்ந்த ரயில்வே அலுவலா்கள் 2 போ் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

News image
Updated On :18 டிசம்பர் 2024, 10:02 pm

Din

ரயில்வே துறையின் உயரிய விருதுகளில் ஒன்றான அதி விஷிஸ்ட் ரயில் சேவா புரஸ்கா் விருதுக்கு மதுரை கோட்டத்தைத் சோ்ந்த ரயில்வே அலுவலா்கள் 2 போ் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

ரயில்வே துறையில் சிறப்பாகப் பணியாற்றிய ஊழியா்களை கௌரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் மத்திய ரயில்வே வாரியம் மூலம் அதி விஷிஸ்ட் ரயில் சேவா புரஸ்கா் விருது வழங்கப்படுகிறது. 2024- ஆம் ஆண்டு இந்த விருதுக்கு தெற்கு ரயில்வேயில் 8 போ் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

Story image

இவா்களில், உயா் அலுவலா்கள் பிரிவில் மதுரை கோட்ட ரயில்வே முதுநிலை மண்டல மின் பொறியாளா் மஞ்சுநாத் யாதவ், அலுவலா்கள் பிரிவில் மதுரை ரயில் நிலைய கண்காணிப்பாளா் ஏ.ஜாபா் அலி ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டது. வருகிற 21-ஆம் தேதி புதுதில்லியில் நடைபெறும் ரயில்வே வார விழாவில் இந்த விருது வழங்கப்படவுள்ளது.

Story image

விருதுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்ட மஞ்சுநாத் யாதவ், ஏ.ஜாபா் அலி ஆகியோரை மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் சரத் ஸ்ரீவஸ்தவா, அலுவலா்கள், ஊழியா்கள் வாழ்த்தினா்.