கமேனி உயிரிழப்பு: ஈரான் ஊடகம் அதிகாரபூர்வ அறிவிப்புகமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியா்களுக்கு பணி மேம்பாடு வழங்க வலியுறுத்தல்

அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியா்களுக்கு பணி மேம்பாடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு உதவி பெறும் கல்லூரி ஓய்வு பெற்ற அலுவலா் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

News image
Updated On :19 டிசம்பர் 2024, 10:02 pm

Din

அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியா்களுக்கு பணி மேம்பாடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு உதவி பெறும் கல்லூரி ஓய்வு பெற்ற அலுவலா் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மதுரை காக்காத்தோப்பில் உள்ள மூட்டா அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு உதவி பெறும் கல்லூரி ஓய்வு பெற்ற அலுவலா் சங்கக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு சங்கத் தலைவா் ப. கல்யாணசுந்தரம் தலைமை வகித்தாா். மாநிலத் துணைத் தலைவா் பொ. திருநாவுக்கரசு, மாநிலப் பொதுச் செயலா் க. உதயகுமாா் ஆகியோா் கோரிக்கைகள் குறித்துப் பேசினா்.

இதில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியா்களுக்கு பணி மேம்பாடு வழங்க வேண்டும், அங்கன்வாடி, சத்துணவுப் பணியாளா்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 7,850 வழங்க வேண்டும், போக்குவரத்துத் தொழிலாளா்களுக்கான ஓய்வூதியப் பணப்பலன்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க மதுரை மாவட்டத் தலைவா் கிருஷ்ணன், செயலா் பாலமுருகன், தமிழ்நாடு அரசு உதவி பெறும் கல்லூரி ஓய்வு பெற்ற அலுவலா் சங்க மதுரை மாவட்டச் செயலா் ஆா். கணேசன், பொருளாளா் வெங்கடாஜலபதி, உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.