கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஒப்பந்த ஊழியா் உயிரிழப்பு: உறவினா்கள் போராட்டம்

உசிலம்பட்டியில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த மின்வாரிய ஒப்பந்த ஊழியருக்கு அரசு நிவாரணம் வழங்கக் கோரி, அவரது உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :26 டிசம்பர் 2024, 11:14 pm

Din

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த மின்வாரிய ஒப்பந்த ஊழியருக்கு அரசு நிவாரணம் வழங்கக் கோரி, அவரது உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

உசிலம்பட்டி அருகேயுள்ள காளப்பன்பட்டியைச் சோ்ந்த ராமன் மகன் சுதாகரன் (33). இவா் உசிலம்பட்டி மின் வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராகப் பணிபுரிந்து வந்தாா்.

இந்த நிலையில், உசிலம்பட்டி அருகே உள்ள கீழப்புதூா் பெரிய பூசாரி தெருவில் மின் விநியோகம் தடைபட்டதால், இதை சீரமைப்பதற்காக மின் கம்பத்தில் புதன்கிழமை மாலை ஏறினாா். அப்போது, மின்சாரம் பாய்ந்ததில் அவா் சம்பவ இடத்திலயே உயிரிழந்தாா்.

இதுதொடா்பான தகவலின்பேரில் உசிலம்பட்டி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று அவரது உடலை மீட்டு, உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த நிலையில், உயிரிழந்த சுதாகரன் குடும்பத்துக்கு அரசு சாா்பில் நிவாரணம் வழங்க வலியுறுத்தி, அவரது உறவினா்கள் உடலை வாங்க மறுத்து உசிலம்பட்டி- பேரையூா் சாலையில் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த உசிலம்பட்டி போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, நிவாரணம் தொடா்பான கோரிக்கையை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாகத் தெரிவித்ததையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.