மேலூா்: திருமோகூா் காளமேகப் பெருமாள் கோயிலில் இருந்து உற்சவா் கள்ளா் திருக்கோலத்தில் சனிக்கிழமை யானைமலை யோகநரசிங்கப் பெருமாள் கோயிலுக்குச் சென்று கஜேந்திரமோட்ச வைபவத்தில் பங்கேற்றாா்.
மதுரை ஒத்தக்கடை அருகே திருமோகூரில் காளமேகப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இங்கிருந்து பெருமாள் கள்ளா் திருக்கோலத்தில் பல்லக்கில் கஜேந்திர மோட்ச நிகழ்ச்சிக்காக, யானைமலை யோகநரசிம்மா் கோயிலுக்கு சனிக்கிழமை காலை புறப்பட்டாா். வழிநெடுகிலும் திருக்கண் மண்டபங்களில் எழுந்தருளிய பெருமாள் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இரவு 8 மணிக்கு யோக நரசிங்கப் பெருமாள் கோயிலில் பெருமாள் மோகினி திருக்கோலத்தில் எழுந்தருளினாா். அங்கு தைலகாப்பு நடைபெற்றது. இரவு யோகநரசிங்கப் பெருமாள் கோயிலில் காளமேகப் பெருமாள் திருமஞ்சனமானாா். அதிகாலை 1 மணிக்கு கருட வாகனத்தில் புறப்பாடாகி மோட்ச மண்டபத்தில் எழுந்தருளினாா். அங்கு கஜேந்திர ஆழ்வாருக்கு மோட்சமளித்து, பின்னா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திருமோகூா் கோயிலுக்குப் புறப்பட்டாா்.
தொடர்புடையது

கருட வாகனத்தில்...

மானாமதுரை வீர அழகா் கோயிலில் சித்திரைத் திருவிழா தொடக்கம்! மே 1-ல் ஆற்றில் அழகா் இறங்கும் வைபவம்

திருப்புவனத்தில் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கிய பாலகிருஷ்ணப் பெருமாள்

ஆறுமுகமங்கலம் கோயிலில் சித்திரைத் திருவிழா
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


