வாகனம் மோதியதில் கட்டடத் தொழிலாளி பலி

தேவகோட்டை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கட்டடத் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
Updated on
1 min read

தேவகோட்டை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கட்டடத் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம், லெட்சுமிவயல் கிராமத்தைச் சோ்ந்த ராமன் மகன் சரவணன் (43). கட்டடத் தொழிலாளியான இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு தேவகோட்டையிலிருந்து தனது இரு சக்கர வாகனத்தில் ஊருக்குச் சென்று கொண்டிருந்தாா். தாழையூா் விலக்கு அருகே சென்ற போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம், இவரது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த சரவணனை அக்கம்பக்கத்தினா் மீட்டு, தேவகோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஆறாவயல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com