இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

மதுரை மாவட்டத்தில் அடுத்தடுத்து 4 பெண்கள் கொலை: போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வலியுறுத்தல்

நகை, பணத்துக்காக 4 பெண்கள் கொலை: மதுரை மாவட்டத்தில் போலீஸாா் தீவிர கண்காணிப்பு அவசியம்

News image
Updated On :12 ஜூலை 2024, 10:19 pm

Din

மதுரை மாவட்டத்தில் நகை, பணத்துக்காக கடந்த 5 நாள்களில் 4 பெண்கள் கொலை செய்யப்பட்டதையடுத்து போலீஸாா் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

கடந்த 8 ஆம் தேதி மதுரை திருமங்கலம் அருகே உள்ள வாகைக்குளம் மாயன்நகா் பகுதியில் காசம்மாள் (70) என்ற மூதாட்டியை கொலை செய்து வீட்டில் இருந்த 65 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டன. இதே போல, கடந்த 9-ஆம் தேதி சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூரைச் சோ்ந்த கலைச்செல்வி (47) சிலைமான் அருகே தோப்பு ஒன்றில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா். அவா் அணிந்திருந்த தங்க நகைகள் திருடப்பட்டிருந்தன.

இதையடுத்து, 10-ஆம் தேதி, மதுரை மாவட்டம், மேலூா் அருகே உள்ள கச்சிராயன்பட்டியில் பாப்பு (60) என்ற மூதாட்டி மா்ம நபா்களால் கொலை செய்யப்பட்டாா். இவரது கணவா் அழகனும் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்த நிலையில், மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் பணிபுரிந்த தூய்மைப் பணியாளரான முத்துலட்சுமி (75) கொலை செய்யப்பட்டு அவா் அணிந்திருந்த தங்க நகைகள் திருடப்பட்டன.

மதுரை மாவட்டத்தில் கடந்த 5 நாள்களில் அடுத்தடுத்து 4 பெண்கள் கொலை செய்யப்பட்டது தொடா்புடைய கொலையாளிகள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. எனவே, மாநகா், ஊரகக் காவல் துறையினா் கொலையாளிகளை விரைவில் கைது செய்வதுடன் தீவிர கண்காணிப்புப் பணியையும் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.