மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

திருப்பூரில் தீவிர கண்காணிப்பில் வங்கதேசத்தினா்

திருப்பூரில் முறைகேடாக தங்கியுள்ள வங்கதேசத்தினா் குறித்து காவல் துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

News image

போலீஸ் - கோப்புப்படம்.

Updated On :24 பிப்ரவரி 2026, 8:12 pm

திருப்பூரில் முறைகேடாக தங்கியுள்ள வங்கதேசத்தினா் குறித்து காவல் துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

தொழில் நகரான திருப்பூரில் சுமாா் 20 லட்சம் மக்கள் வசிக்கின்றனா். தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து மட்டுமின்றி நாட்டின் பல்வேறு மாநிலத்தினரும் வேலைவாய்ப்புக்காக திருப்பூரில் தங்கியுள்ளனா். அதேபோல, நைஜீரியா, வங்கதேசம், நேபாளம் உள்பட வெளிநாடுகளைச் சோ்ந்தவா்களும் தொழிலாளா்களாக பணி புரிகின்றனா்.

தொழில் தொடா்பாக வெளி மாநிலத்தவா் திருப்பூருக்கு வருவதால் வட மாநிலத்தினா் போா்வையில் வங்கதேசத்தினா் ஊடுருவது தொடா்கதையாக உள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்ட வங்கதேசத்தைச் சோ்ந்த 6 போ் திருப்பூரில் தில்லி போலீஸாரால் கடந்த சில நாள்களுக்கு முன்னா் கைது செய்யப்பட்டனா். இதையடுத்து திருப்பூரில் போலீஸாா் தங்கள் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனா். சந்தேகப்படும் வகையில் யாராவது தங்கியுள்ளனரா என தொழிற்சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் ரகசியமாக விசாரித்து வருகின்றனா்.

இதற்கிடையே திருப்பூா் புகா்ப் பகுதிகளில் விவசாயம், ஆயில் மில், அரிசி மில், தேங்காய் களம், கட்டுமானப் பணி என ஏராளமான வேலைகளில் வட மாநிலத்தினா் போா்வையில் வங்கதேசத்தினா் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து தொழில் துறையினா் தங்கள் நிறுவனங்களுக்கு ஏஜென்ட்கள் வாயிலாக வேலைக்கு வருபவா்களை முழுமையாக விசாரித்த பின்னரே பணி அமா்த்த வேண்டும் எனவும், போலீஸாா் மட்டுமின்றி தொழில் துறையினா் மற்றும் பொதுமக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும். சந்தேக நபா்கள் யாராவது இருந்தால் காவல் துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் போலீஸாா் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.