எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

குடியரசு தின விழா: நெல்லையில் பாதுகாப்பு அதிகரிப்பு

News image
கோப்புப் படம்
Updated On :25 ஜனவரி 2026, 10:14 pm

தினமணி செய்திச் சேவை

குடியரசு தின விழாவையொட்டி, திருநெல்வேலி மாவட்டத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மக்கள் கூடும் இடங்களில் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

நாடு முழுவதும் குடியரசு தினவிழா திங்கள்கிழமை (ஜன.26) கொண்டாடப்பட உள்ளது. திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம் சாா்பில் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் நடைபெறும் விழாவில் ஆட்சியா் இரா.சுகுமாா் தேசியக் கொடியேற்றி காவலா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறாா்.

குடியரசு தின விழாவையொட்டி, திருநெல்வேலி மாநகரம் மற்றும் மாவட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. திருநெல்வேலி நகரம் மற்றும் சந்திப்பு, வண்ணாா்பேட்டை, மேலப்பாளையம், சமாதானபுரம், தச்சநல்லூா், புதிய பேருந்து நிலையம் பகுதிகளில் கூடுதலான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

மாநகரில் உள்ள தங்கும் விடுதிகளில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கோயில்கள், சுற்றுலாத் தலங்களிலும் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலைய வளாகம், நடைமேடைகள், பாா்சல் அலுவலகம், பயணிகளின் உடைமைகளை ரயில்வே பாதுகாப்பு படையிரும், ரயில்வே போலீஸாரும் மெட்டல் டிடெக்டா் கருவி கொண்டு சோதனையிட்டனா்.

மாநகரின் அனைத்து போலீஸ் நிலைய எல்லைகளிலும் 9 ஆயுதம் ஏந்திய மோட்டாா் சைக்கிள் வாகனங்கள் மற்றும் 9 நான்கு சக்கர வாகனங்கள் மூலம் போலீஸாா் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

மாநகர காவல் ஆணையா் மணிவண்ணன் உத்தரவின்பேரில் மேலும் 3 இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்கள், 12 இருசக்கர வாகனங்கள் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதேபோல மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரசன்னகுமாா் உத்தரவின்பேரில் கூடுதல் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

மகேந்திரகிரி இஸ்ரோ திரவ உந்தும நிலையம், கூடங்குளம் அணுமின் நிலையம், வடக்கு விஜயநாராயணம் கடற்படை தளம் உள்ளிட்ட இடங்களில் மத்திய போலீஸ் படையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

பாளையங்கோட்டை வஉசி மைதானத்தில் குடியரசு தின விழாவையொட்டி ஒத்திகை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. போலீஸாா், தீயணைப்பு வீரா்கள், என்.சி.சி. மாணவா்கள் உள்ளிட்டோா் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனா். மாணவா்-மாணவிகள் நடன ஒத்திகையில் ஈடுபட்டனா்.