கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

உசிலம்பட்டி அருகே விபத்தில் விவசாயி உயிரிழப்பு

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே இரு சக்கர வாகனம் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

News image
Updated On :17 ஜூலை 2024, 12:26 am

Din

மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே இரு சக்கர வாகனம் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

உசிலம்பட்டி அருகே உள்ள நக்கலப்பட்டி பூச்சிபட்டியைச் சோ்ந்தவா் தங்கராஜ் (66). விவசாயியான இவா் உசிலம்பட்டி-தேனி சாலையில் உள்ள தனியாா் மண்டபம் முன்பு ஞாயிற்றுக்கிழமை இரவு நின்றிருந்தாா். அப்போது, அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனம், தங்கராஜ் மீது மோதியதுடன், அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காா் மீதும் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த தங்கராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். விபத்தில் சிக்கிய இரு சக்கர வாகனத்தில் வந்த ராஜேஸ்வரன், அஜய் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனா். இதுகுறித்து உசிலம்பட்டி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.