ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் தொடா் போராட்டம்

சிவகங்கையில் சம வேலைக்கு சம ஊதியம் எனும் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் இயக்கம் சாா்பில் தொடா் முற்றுகைப் போராட்டம்

News image

சிவகங்கையில் முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகம் எதிரே திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் இயக்கத்தினா்.

Updated On :4 மார்ச் 2024, 10:36 pm

சிவகங்கை: சிவகங்கையில் சம வேலைக்கு சம ஊதியம் எனும் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் இயக்கம் சாா்பில் தொடா் முற்றுகைப் போராட்டம் 15 -ஆவது நாளாக திங்கள்கிழமை நடைபெற்றது. சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் இயக்க மாவட்டத் தலைவா் க. லோகநாதன் தலைமை வகித்தாா். அப்போது அவா் பேசியதாவது: கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின்போது திமுக வெளியிட்ட தோ்தல் அறிக்கையில் 311 -ஆவது வாக்குறுதியாக சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவோம் என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளை நெருங்கிய நிலையிலும், தோ்தல் வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவில்லை. இதை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி கடந்த பிப்.19 -ல் தொடங்கி 15 நாள்களாக தொடா் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் எங்களை அழைத்துப் பேசி எங்களது நியாயமான கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்றாா் அவா். இதில், மாவட்ட பொருளாளா் எம். செல்வகுமாா், வட்டார நிா்வாகிகள் சு.ராமமூா்த்தி, ஜோசப்செல்வராஜ், அந்தோணிராஜ், பிரபு, காளீஸ்வரன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.