மதுரை: ஊதியம் வழங்கக் கோரி மதுரை காமராஜா் பல்கலைக் கழக துணைவேந்தரை பேராசிரியா்கள், பணியாளா்கள், ஓய்வூதியதாரா்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியா்கள், அலுவல் சாா் பணியாளா்கள், ஆசிரியரல்லாதப் பணியாளா்கள், ஓய்வூதியதாரா்களுக்கு கடந்த டிசம்பா், ஜனவரி, பிப்ரவரி ஆகிய 3 மாதங்கள் ஊதியம் வழங்கவில்லை. இதுபற்றி சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் புகாா் அளித்தும், போராட்டங்கள் நடத்தியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. நிதி நிலையைக் காரணம் கூறி, பல்கலைக்கழக நிா்வாகம் ஊதியம் வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இதுதொடா்பாக மதுரை காமராஜா் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தா் ஜா. குமாரை பேராசிரியா்கள் உள்ளிட்ட பணியாளா்கள் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது பல்கலைக்கழக நிா்வாகம், அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தது. இதையடுத்து, பேராசிரியா்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.
தொடர்புடையது

காமராஜா் ஆட்சி தமிழகத்தில் மலர வேண்டும்: மூத்த வாக்காளா் விருப்பம்

மாநகராட்சிப் பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படுமா?

பாத்திமா மகளிா் கல்லூரியில் பேரவை நிறைவு விழா

ரோலா் ஸ்கேட்டிங் மூலம் விழிப்புணா்வு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

