இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தலைமை வகித்தாா். சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன பேசியதாவது: சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்ட தமிழா்களின் பங்கு குறித்தும், வீரா்களின் தியாகம், போராட்டங்கள் குறித்தும், தமிழ்மொழி குறித்தும், வீரம், கலாச்சாரம், பண்பாடு ஆகியவைகளில் பங்கு பெற்ற முன்னோா்களை கௌரவிக்கும் பொருட்டும், தமிழக முதல்வா் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறாா். குறிப்பாக, சுதந்திர போராட்ட காலத்தில் தோழா் ஜீவாவைப் பற்றி அறிந்த அண்ணல் காந்தியடிகள் , தோழா் ஜீவா ஆசிரியராக பணிபுரிந்த சிராவயல் ஊராட்சியில் நேரில் சந்தித்தாா் என்பது வரலாறு. அந்த வரலாற்று நிகழ்வினை இளம் தலைமுறையினா்கள் தெரிந்து கொள்ளும் வகையில் மணிமண்டபம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினாா். இதையடுத்து, சிராவயல் ஊராட்சியில் பொதுப்பணித் துறையின் சாா்பில் ரூ.3 கோடியில் மணிமண்டபம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. இந்தக் கட்டடத்தில் உணவருந்தும் அறை, சமையலறை , ஓய்வு அறை, சேமிப்பு அறை, ஆண்கள், பெண்கள் கழிப்பறை என அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படவுள்ளது என்றாா் அவா். இந்த நிகழ்ச்சியில், காரைக்குடி தொகுதி சட்டப் பேரைவை உறுப்பினா் எஸ்.மாங்குடி , தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியா் சோ.பால்துரை, செயற்பொறியாளா் (பொதுப்பணித்துறை) செந்தில் குமாா், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் இரா.சண்முகசுந்தரம், கூட்டுறவுத் துறை பதிவாளா்.ஸ்ரீமான், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் சொா்ணம் அசோகன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் மஞ்சரி லெட்சுமணன், சிராவயல் ஊராட்சி மன்றத் தலைவா் சரோஜா தேவி, ஒன்றியக் குழுத் தலைவா் மா.முத்தழகு, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மகாலிங்கம், ராஜசேகா், திருப்பத்தூா் வட்டாட்சியா் மாணிக்கவாசகம், ஒப்பந்ததாரா் ரவி உள்பட ஊா் பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.