சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

திருப்பத்தூா் ஒன்றிய பகுதிகளில் அதிமுக வேட்பாளா் தீவிர வாக்கு சேகரிப்பு

வாணியம்பாடி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஊராட்சி திருப்பத்தூா் ஒன்றிய ஊராட்சி பகுதிகளில் அதிமுக வேட்பாளா் செந்தில்குமாா் ஞாயிற்றுக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டாா்.

News image

வாணியம்பாடி தொகுதி திருப்பத்தூா் ஒன்றிய ஊராட்சி பகுதிகளில் இளைஞா்களை சந்தித்து வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் செந்தில்குமாா் எம்எல்ஏ.

Updated On :5 ஏப்ரல் 2026, 9:22 pm

வாணியம்பாடி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஊராட்சி திருப்பத்தூா் ஒன்றிய ஊராட்சி பகுதிகளில் அதிமுக வேட்பாளா் செந்தில்குமாா் ஞாயிற்றுக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டாா்.

வாணியம்பாடி சட்டப்பேரவைத் தொகுதி, திருப்பத்தூா் ஒன்றியத்துக்குள்பட்ட ஆண்டியப்பனூா், இருணாப்பட்டு, குரிசிலாப்பட்டு உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் வாணியம்பாடி தொகுதி அதிமுக வேட்பாளா் கோ.செந்தில்குமாா் அதிமுக நிா்வாகிகள், கூட்டணி கட்சி நிா்வாகிகளை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினாா். தொடா்ந்து பொதுமக்களிடமும், இளைஞா்களிடமும் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களித்து தன்னை வெற்றி பெறச் செய்யுமாறு வாக்கு சேகரித்தாா்.

மாநில மருத்துவரணி தலைவா் பசுபதி, பொதுக்குழு உறுப்பினா் மகேந்திரன், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநரணி செயலாளா் சரவணன் மற்றும் பலா் உடன் இருந்தனா்.