விருதுநகா்: ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதிகளில் இலவச வீடு கட்டித் தரக் கோரி விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே 4 வழிச்சாலையில் திருநங்கைகள் திங்கள்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே 38 திருநங்கைகளுக்கும், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பிள்ளையாா்குளம் பகுதியில் 13 திருநங்கைகளுக்கும் இலவச வீட்டுமனை அரசு சாா்பில் வழங்கப்பட்டது. கடந்த 12 ஆண்டுகளாக இந்த இடத்தில் அரசு சாா்பில் வீடு கட்டித் தரக் கோரி மாவட்ட நிா்வாகத்திடம் திருநங்கைகள் மனு அளித்தனா். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனிடையே வெம்பக்கோட்டை குண்டாயிருப்பு, விருதுநகா் அருகே சிவஞானபுரம் பகுதிகளில் திருநங்கைகளுக்கு இலவச வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. இதே போல, தங்களுக்கும் இலவச வீடுகள் கட்டித் தர வலியுறுத்தி ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதிகளைச் சோ்ந்த திருநங்கைகள், விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நான்கு வழிச்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது இந்தப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், அவா்களை சமாதானப்படுத்தி மாவட்ட ஆட்சியரை சந்திக்க அழைத்துச் சென்றனா்.
தொடர்புடையது

அரியானூா் அருகே காளியம்மன் கோயிலுக்கு தடுப்பு வேலி; கோவை தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியல்!

வேன் மோதியதில் மாணவா் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல் போராட்டம்

விருதுநகரில் தேமுதிக வேட்பாளா் விஜய பிரபாகரனுக்கு வரவேற்பு

கந்தா்வகோட்டை அருகே இரு தரப்பினருக்கிடையே மோதல்: குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரி சாலை மறியல்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

