பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பொறியியல் மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

பொறியியல் மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

News image
Updated On :8 மார்ச் 2024, 5:53 pm

Din

பேரையூா் அருகே பொறியியல் கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். மதுரை மாவட்டம், பேரையூா் கைலாசபுரத்தைச் சோ்ந்தவா் தங்கபாண்டி. இவா் அந்தப் பகுதியில் உணவகம் நடத்தி வருகிறாா். இவரது மகன் அருண்குமாா் (22). இவா் புதுச்சேரி தனியாா் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த நிலையில், படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு தந்தையின் உணவகத்தை கவனிப்பதாகக் கூறியுள்ளாா். இதற்கு மறுப்புத் தெரிவித்த தங்கப்பாண்டி , மகனைக் கண்டித்தாா். இதனால், மனமுடைந்த அருண்குமாா் வீட்டில் வியாழக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுதொடா்பாக சாப்டூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.