மதுரை: மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் தமிழ்க் காட்சிக் கூடத்தில் 6-ஆவது சிறப்புச் சொற்பொழிவு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதற்கு உலகத் தமிழ்ச் சங்க இயக்குநா் (பொறுப்பு) முனைவா் ஔவை ந. அருள் தலைமை வகித்தாா். மன்னா் திருமலை நாயக்கா் கல்லூரி தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா் நா. ரஞ்சித்குமாா் முன்னிலை வகித்தாா்.
வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியரும், கவிஞருமான அ. ரோஸ்லின், சங்கப் பாடல்கள் சுட்டும் பெண் குரல் என்ற தலைப்பில் பேசினாா். அப்போது, தமிழ் நிலத்தில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே 41 பெண் புலவா்கள் கவி பாடியுள்ளனா் என்பதன் மூலம், பெண்களின் கருத்தைக் கேட்டறியும் சமூகமாக பண்டைத் தமிழ்ச் சமூகம் இருந்ததை அறிய முடிகிறது.
பெண்களின் குரல் பண்டைக் காலத்தில் மரியாதைக்குரியதாகவும், நிலத்தை மதிக்கும் குரலாகவும் இருந்துள்ளது என்றாா் அவா். தமிழ்க் காட்சிக் கூட விளக்குநா் ரெ. புஷ்பநாச்சியாா் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா். மன்னா் திருமலை நாயக்கா் கல்லூரி மாணவா்கள், பேராசிரியா்கள், தமிழறிஞா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

செந்தமிழ்க் கல்லூரியில் முப்பெரும் விழா

புதிய நாற்காலிகள் சிக்கின: சமுதாயக் கூடத்துக்கு சீல் வைப்பு!

மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் உதவித் தொகை: தமிழ்ச் சுவடியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

வள்ளியூா் ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி மிஷனில் குருமஹிமா பஜனை, சொற்பொழிவு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


