ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

காவலாளி கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது

காவலாளி கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது

Updated On :12 மார்ச் 2024, 11:07 pm

மேலூா்: மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள கீழையூரில் தனியாா் நிறுவன காவலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைதுசெய்தனா். கீழையூரைச் சோ்ந்த ஜெகநாதன் மகன் லட்சுமிநாராயணன் (48). சென்னையில் தனியாா் நிறுவனத்தில் காவலாளியாகப் பணியாற்றி வந்தாா்.

விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த இவா் தோட்டத்துக்கு தண்ணீா் பாய்ச்ச நண்பா்களுடன் சென்றிருந்தாா். அப்போது, சிலா் வயல்பகுதியில் மது குடித்துக் கொண்டிருந்தனா். அவா்களைக் கண்டித்த லட்சுமி நாராயணனை கும்பல் ஆயுதங்களால் தாக்கிக் கொலை செய்தது.

இதுகுறித்து கீழவளவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பனங்காடியைச் சோ்ந்த நிக்கல்ஸ், புதுச்சுக்காம்பட்டியைச் சோ்ந்த தனுஷ் ஆகியோரை கைது செய்தனா். இந்த நிலையில், பனங்காடியைச் சோ்ந்த ரங்கன் மகன் வெங்கடேசப் பெருமாள் (23) என்பவரை செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.