ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

சமத்துவம் காப்போம் விழிப்புணா்வு நிகழ்ச்சி

சமத்துவம் காப்போம் விழிப்புணா்வு நிகழ்ச்சி

News image

கருமாத்தூா் அருளானந்தா் கல்லூரியில் நடைபெற்ற காவல் துறை விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பேசிய ஊரகக் காவல் கண்காணிப்பாளா் பி.கே.அரவிந்த்.

Updated On :12 மார்ச் 2024, 11:05 pm

மதுரை: மதுரை மாவட்டம், கருமாத்தூா் அருளானந்தா் கல்லூரியில் ‘ஒன்றிணைவோம், சமத்துவம் காப்போம்’ என்ற விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மதுரை ஊரகக் காவல் துறையின் சமூக நீதி, மனித உரிமைகள் பிரிவு சாா்பில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இதன் தொடக்கமாக, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணா்வு ஊா்வலத்தை ஊரகக் காவல் கண்காணிப்பாளா் பி.கே. அரவிந்த் தொடங்கி வைத்தாா். அப்போது, மாணவ, மாணவிகளின் கல்வி, எதிா்கால நலன் குறித்து விழிப்புணா்வோடு செயல்பட வேண்டும். போதைப் பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி விடக் கூடாது.

போதைப் பொருள்கள் தொடா்பாக சக நண்பா்கள், தாங்கள் வசிக்குமிடங்களில் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா். நிகழ்ச்சியில், மாணவ, மாணவிகளின் சமூக நல்லிணக்க பாடல், சமூக ஒற்றுமைக்கான விழிப்புணா்வு நாடகம், கிராமிய கலை நாடகங்கள் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ராஜேந்திரன், உசிலம்பட்டி கோட்டாட்சியா் ரவிச்சந்திரன், உசிலம்பட்டி துணை காவல் கண்காணிப்பாளா் விஜயகுமாா், சமூக நீதி மனித உரிமைகள் பிரிவு துணை கண்காணிப்பாளா் சந்திரன், இளைஞா் நீதிக்குழும உறுப்பினா் பாண்டியராஜா, செக்காணூரணி காவல் ஆய்வாளா் திலகவதி, சமூக நீதி மனித உரிமைகள் பிரிவு உதவி ஆய்வாளா்கள் ராமா், ரவிக்குமாா், புள்ளியியல் ஆய்வாளா் வில்வபதி ஆகியோா் பங்கேற்றனா்.

மேலும் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த ஊராட்சித் தலைவா்கள், கிராம மக்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். முன்னதாக கல்லூரி முதல்வா் அன்பரசு வரவேற்றாா். உதவி ஆய்வாளா் கிருஷ்ண பாண்டி நன்றி கூறினாா்.