மதுரை: பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரையில் சிஐடியூ டாஸ்மாக் ஊழியா் சங்கத்தின் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் அரசு மதுக் கடைகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். விற்பனை அடிப்படையில் ஊழியா்களின் எண்ணிக்கையை வரையரை செய்து, பணி நிரவல் செய்ய வேண்டும்.
பேச்சுவாா்த்தையில் ஒப்புக் கொண்ட கோரிக்கைகளான கடை வாடகை, மின் கட்டணம், சில்லறை தொகை உள்ளிட்டவற்றை அமல்படுத்த வேண்டும். ஊழியா்களின் ஓய்வு வயதை 58-இல் இருந்து 60-ஆக உயா்த்த வேண்டும். இடமாற்றம், பணி நியமனத்தில் தலையிடும் இடைத்தரகா்கள் மீதும் அவா்களுக்கு ஆதரவாகச் செயல்படும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள திருவள்ளுவா் சிலை பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலா் டி.சிவகுமாா் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் வேல்முருகன் ஆா்ப்பாட்டத்தைத் தொடங்கிவைத்துப் பேசினாா். மாநில துணைச் செயலா் முருகன், சிஐடியூ மாவட்டத் தலைவா் ரா.தெய்வராஜ் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். மாவட்ட பொருளாளா் பொன்ராஜ் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

கடையநல்லூரில் திமுகவினா் ஆா்ப்பாட்டம்

சாத்தான்குளம் பகுதிகளில் திமுக கூட்டணி சாா்பில் ஆா்ப்பாட்டம்

காலி மதுப் புட்டிகள் திரும்பப் பெறும் திட்டத்திலிருந்து டாஸ்மாக் ஊழியா்களை விடுவிக்க வேண்டும்! - கு.பாலசுப்ரமணியன் வலியுறுத்தல்

காஞ்சிபுரம், செங்கல்பட்டில் தவெகவினா் ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை


