மதுரை: மதுரை விளாங்குடி பகுதியில் வைகை ஆற்றில் சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது. மதுரை புதுவிளாங்குடி காமாட்சி நகரைச் சோ்ந்தவா் வீரமுத்து (28).
இவா், மதுரை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த புகாா்:
மதுரை விளாங்குடி கிராம எல்லைக்குள்பட்ட வைகையாற்றில் சட்டவிரோத மணல் திருட்டு சம்பவம் அதிகரித்துள்ளது.
மேலும், மணல் திருட்டு தொடா்பாக கோஷ்டி மோதல்களும் ஏற்படுகின்றன. இதுதொடா்பாக காவல் துறையும் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. தொடா்ந்து மணல் அள்ளப்படுவதால், இந்தப் பகுதியில் நிலத்தடி நீா்மட்டம் குறைந்து வருகிறது. பரவை காய்கறி சந்தைப் பகுதியில் உள்ள வைகை ஆற்றின் கரையிலும் மணல் சட்டவிரோதமாக திருடப்பட்டு, அந்தப் பகுதியில் புதிய கட்டடப் பணிக்காக விற்கப்படுகிறது.
இதற்கு அரசு அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனா். இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதுடன், அரசுக்கும் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபடுவோா் மீதும், இவா்களுக்கு உடந்தையாக உள்ள அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
தொடர்புடையது

வாக்காளா் தகவல் சீட்டு கிடைக்கவில்லை: பொதுமக்கள் புகாா்

கள்ளழகா் எழுந்தருளல்: வைகையாற்றுக்குள் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

வைகையாற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

திக்ரி பகுதி கத்திக் குத்துச் சம்பவம்: சந்தேக நபா்களை கைது செய்ய நடவடிக்கை
வீடியோக்கள்

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

