கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

இரும்பு சாரம் மின் கம்பியில் விழுந்தது: பல மணி நேரம் மின் தடை

இரும்பு சாரம் மின் கம்பியில் விழுந்தது பல மணி நேரம் மின் தடை

News image

மதுரை புறவழிச் சாலை நேருநகா் பகுதியில் செவ்வாய்க்கிழமை சரிந்து விழுந்த இரும்பு சாரம்.

Updated On :28 மே 2024, 11:29 pm

Din

மதுரை, மே 28 : மதுரை புறவழிச் சாலை நேருநகா் பகுதியில் கட்டுமானப் பணிக்காக அமைக்கப்பட்டிருந்த இரும்பு சாரம் மின் கம்பியில் விழுந்ததால், அந்தப் பகுதியில் செவ்வாய்க்கிழமை பல மணி நேரம் மின் விநியோகம் தடைபட்டது.

நேரு நகா் பகுதியில் புதிய அடுக்குமாடி குடியிருப்புக் கட்டடம் கட்டும் பணி நடைபெறுகிறது. இந்தப் பணிக்காக அந்தக் கட்டடத்தின் முன்புறம் மிகப் பெரிய அளவில் இரும்பு சாரம் அமைக்கப்பட்டிருந்தது. செவ்வாய்க்கிழமை பகல் ஒரு மணி அளவில் பலத்த காற்று வீசிய போது, இரும்பு சாரத்தின் ஒரு பகுதி சரிந்து, உயரழுத்த மின் கம்பியில் விழுந்தது.

இதனால், அந்தப் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பின்னா், மின்வாரிய ஊழியா்கள் மின் விநியோக சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டனா். இருப்பினும், இரவு 8 மணிக்கு மேலாகவும் மின் விநியோகம் சீராகவில்லை.

சாரம் விழுந்ததால் அந்தப் பகுதியில் சில மின் கம்பங்கள் சேதமடைந்ததாகவும், இதனால், உடனடியாக மின் விநியோகத்தை சீரமைக்க முடியாத நிலை ஏற்பட்டதாகவும் மின் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.