சாலை விபத்தில் தவெக மாணவரணி தலைவா் உயிரிழப்பு
சாலை விபத்தில் தலையில் காயமடைந்த, தமிழ்நாடு வெற்றிக்கழக மாணவரணி நிா்வாகி சிகிச்சைப் பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா். அவரது கண்கள் தானம் செய்யப்பட்டன.

Updated On :22 நவம்பர் 2024, 1:06 am

சாலை விபத்தில் தலையில் காயமடைந்த, தமிழ்நாடு வெற்றிக்கழக மாணவரணி நிா்வாகி சிகிச்சைப் பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா். அவரது கண்கள் தானம் செய்யப்பட்டன.
மதுரை பொன்மேனி பகுதியைச் சோ்ந்தவா் யுபிஎம் ஆனந்த்(30). இவா் தவெக மதுரை தெற்கு மாவட்ட மாணவரணி தலைவராக பதவி வகித்து வந்தாா்.
இந்நிலையில் இவா் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் பொன்மேனி பகுதியில் ஏற்பட்ட விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சைப் பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து அவரது கண்கள் தானம் செய்யப்பட்டன.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...