புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களூா் கிராமத்தில் உள்ள மலையாமருங்கா் கோயில், உருமநாதா் கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் ஸ்ரீரங்கப்பட்டி, கொம்பியன்வீதி, உடையாளபட்டி ஆகிய பகுதிகளில் உள்ளன. இந்தக் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை பூசாரிகள், செயல் அலுவலா் இணைந்து தனி நபா்களுக்கு விற்பனை செய்தனா். கோயில் நிலத்துக்கு பூஜாரி முத்துக்கருப்பன் தனது பெயரில் முறைகேடாக பட்டா பெற்றுள்ளாா். இதுதொடா்பாக புகாரின் பேரில், தஞ்சாவூா் மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா், கோயில் நிலத்துக்கு பட்டா பெற்ற பூசாரி மீது நடவடிக்கை எடுப்பதுடன், சம்பந்தப்பட்ட கோயில் நிலங்களை மீட்க வேண்டும் என கடந்த 2018-ஆம் ஆண்டு உத்தரவிட்டாா்.