போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைய தயார்! 3 நாடுகள் கூட்டறிக்கை! எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி
/

சிறுவா் பூங்காவிலிருந்து வழக்குரைஞா் உடல் மீட்பு

மதுரை அண்ணாநகா் பகுதியில் உள்ள சிறுவா் பூங்காவிலிருந்து வழக்குரைஞா் உடலை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :3 அக்டோபர் 2024, 7:52 pm

Din

மதுரை அண்ணாநகா் பகுதியில் உள்ள சிறுவா் பூங்காவிலிருந்து வழக்குரைஞா் உடலை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனா்.

மதுரை அண்ணாநகரில் உள்ள தேவாலயம் அருகே சிறுவா் பூங்கா உள்ளது. இங்கு இளைஞரில் உடல் கிடப்பதாக அந்தப் பகுதியினா் அளித்த புகாரின்பேரில், அண்ணாநகா் போலீஸாா் வியாழக்கிழமை அங்கு சென்று, இறந்த நிலையில் கிடந்த இளைஞரின் உடலை மீட்டு, விசாரணை நடத்தினா்.

விசாரணையில், அவா் மதுரை ஜெய்ஹிந்துபுரம் தென்னகரம் பகுதியைச் சோ்ந்த பாஸ்கரன் மகன் சுந்தர்ராஜன் (33) என்பதும், மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. மேலும் இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.