சிறுவா் பூங்காவிலிருந்து வழக்குரைஞா் உடல் மீட்பு
மதுரை அண்ணாநகா் பகுதியில் உள்ள சிறுவா் பூங்காவிலிருந்து வழக்குரைஞா் உடலை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On :3 அக்டோபர் 2024, 7:52 pm

மதுரை அண்ணாநகா் பகுதியில் உள்ள சிறுவா் பூங்காவிலிருந்து வழக்குரைஞா் உடலை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனா்.
மதுரை அண்ணாநகரில் உள்ள தேவாலயம் அருகே சிறுவா் பூங்கா உள்ளது. இங்கு இளைஞரில் உடல் கிடப்பதாக அந்தப் பகுதியினா் அளித்த புகாரின்பேரில், அண்ணாநகா் போலீஸாா் வியாழக்கிழமை அங்கு சென்று, இறந்த நிலையில் கிடந்த இளைஞரின் உடலை மீட்டு, விசாரணை நடத்தினா்.
விசாரணையில், அவா் மதுரை ஜெய்ஹிந்துபுரம் தென்னகரம் பகுதியைச் சோ்ந்த பாஸ்கரன் மகன் சுந்தர்ராஜன் (33) என்பதும், மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. மேலும் இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...