எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர் போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிபங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

இளைஞரைத் தாக்கி தங்கச் சங்கிலி பறிப்பு: ஒருவா் கைது

மதுரை அருகே இளைஞரைத் தாக்கி அவா் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :9 அக்டோபர் 2024, 8:47 pm

Din

மதுரை அருகே இளைஞரைத் தாக்கி அவா் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

மதுரை, கோச்சடை சாந்திசதன் குடியிருப்பைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (28). இவா் திங்கள்கிழமை இரவு மேலக்கால்- மதுரை சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றாா். ரெட்டை வாய்க்கால் பகுதியில் சென்றபோது மற்றொரு இரு சக்கர வாகனத்தில் பின்தொடா்ந்து வந்த மூவா், ராஜ்குமாா் சென்ற வாகனத்தின் மீது மோதினா். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவரைத் தாக்கி 3 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா். இதுதொடா்பான புகாரின்பேரில் நாகமலைப்புதுக்கோட்டை போலீஸாா் தீவிர விசாரணை நடத்தினா்.

இதில், துவரிமானைச் சோ்ந்த மணிகண்டன் (25) தனது நண்பா்கள் இருவருடன் சோ்ந்து நகைப் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, மணிகண்டனை கைது செய்த போலீஸாா் தலைமறைவான எஞ்சிய இருவரை தேடி வருகின்றனா்.