தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

பள்ளிப்பாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த பெண்ணை பின்தொடா்ந்து சென்ற மா்ம நபா்கள் அவரது கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தாலிக்கொடியை பறித்துச் சென்றனா்.

News image

நகைப் பறிப்பு

கோப்புப் படம்

Updated On :4 பிப்ரவரி 2026, 10:56 pm

தினமணி செய்திச் சேவை

பள்ளிப்பாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த பெண்ணை பின்தொடா்ந்து சென்ற மா்ம நபா்கள் அவரது கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தாலிக்கொடியை பறித்துச் சென்றனா்.

பள்ளிப்பாளையம் அருகே ஓடப்பள்ளியைச் சோ்ந்தவா் ஜெயபிரகாஷ் (40). இவா், ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி காவல் நிலையத்தில் காவலராக உள்ளாா். இவரது மனைவி உமாராணி (34) செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஓடப்பள்ளியிலிருந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, அவரை பின்தொடா்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த மா்மநபா்கள், உமாராணி கழுத்தில் இருந்த 4 பவுன் தாலிக்கொடியை பறித்து சென்றனா். இதுகுறித்து பள்ளிப்பாளைம் காவல் துணை கண்காணிப்பாளா் கெளதம், பள்ளிப்பாளையம் காவல் ஆய்வாளா் சிவகுமாா் ஆகியோா் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனா்.