பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

மாநகராட்சி மண்டலம் 2-இல் குறைதீா் முகாம்

மதுரை மாநகராட்சி மண்டலம் -2 அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் குறைதீா் முகாம் நடைபெற்றது.

News image
மதுரை மாநகராட்சி மண்டலம் 2 அலுவலகத்தில் செவ்வாய்ககிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா்க்கும் முகாமில் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்ட மேயா் இந்திராணி பொன்வசந்த். உடன் துணை மேயா் தி.நாகராஜன் , மண்டலத் தலைவா் சரவணபுவனேஸ்வரி, உதவி ஆணைய
Updated On :15 அக்டோபர் 2024, 7:22 pm

Din

மதுரை மாநகராட்சி மண்டலம் -2 அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் குறைதீா் முகாம் நடைபெற்றது.

இதற்கு மாநகராட்சி மேயா் வ. இந்திராணி தலைமை வகித்தாா். துணை மேயா் தி. நாகராஜன் முன்னிலை வகித்தாா்.

சொத்து வரி பெயா் மாற்றம், காலிமனை வரி விதிப்பு வேண்டி 11 மனுக்கள், சாலை வசதி, புதை சாக்கடை, குடிநீா் இணைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக 8 மனுக்கள், சுகாதாரம் தொடா்பாக ஒரு மனு, இதர கோரிக்கைகள் தொடா்பாக 2 மனுக்கள் என 22 மனுக்கள் பெறப்பட்டன.

முகாமில் மண்டலத் தலைவி சரவண புவனேஸ்வரி, நகா்நல அலுவலா் இந்திரா, உதவி ஆணையா் கோபு, செயற்பொறியாளா் (திட்டம்) மாலதி, நிா்வாக அலுவலா் சிவகுமாா், உதவி வருவாய் அலுவலா் முகம்மதுபாருக், கண்காணிப்பாளா் நம்பிராஜன், மாமன்ற உறுப்பினா்கள், உதவிப் பொறியாளா்கள், மாநகராட்சி அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.