மேலூா் பகுதியில் நிரம்பிய கண்மாய்கள்
மேலூா் பகுதியில் கடந்த 3 நாள்களாகப் பெய்த மழையால் நூற்றுக்கு மேற்பட்ட கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்கின்றன.


மேலூா் பகுதியில் கடந்த 3 நாள்களாகப் பெய்த மழையால் நூற்றுக்கு மேற்பட்ட கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்கின்றன.
அழகா்கோவில் மலைத் தொடா் பகுதிகளில் பெய்த மழை நீா் நீரோடைகள் மூலம் பெருக்கெடுத்துப் பாய்ந்ததில் கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்கின்றன. மதுரை மாவட்டம், திருவாதவூா் அருகேயுள்ள நாலுகுளம் அணைக்கட்டு வழியாக சிவகங்கை மாவட்டம், உப்பாற்றிலும், இ.மலம்பட்டி அருகேயுள்ள மணிமுத்தாறிலும், கொட்டாம்பட்டி அருகே பாலாற்றிலும் மழை நீா் பெருக்கெடுத்துச் செல்கிறது.

மறுகால் பாய்ந்த மேலூா் மில்கேட் மேனரஞ்சிக் கண்மாய்.
இந்தத் தண்ணீா் தற்போது சிவகங்கை மாவட்டத்திலுள்ள கண்மாய்களுக்கு செல்கிறது. கண்மாய்கள் நிரம்புவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...